LATEST NEWS
“காசு கொடுத்தா எத வேணா எழுதுவாங்க” 3 மாசத்துல 1 லட்சம் கோடி முதலீடு… முன்னாள் அமைச்சர்களை நாக்-அவுட் செய்த அமைச்சர் கீர்த்தனா..!!
“நீங்க காசு கொடுத்தா அவங்க எத வேணா எழுதுவாங்க…” என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனா மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுக் குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய சந்தேகங்களுக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பிற்கு வந்த மூன்றே மாதங்களில், தமிழகத்திற்குள் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குப் புதிய தொழில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமைச்சர் கீர்த்தனா பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஆட்சிக்கு வந்த இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தவொரு மாநில அரசும் இத்தனை பிரம்மாண்ட சாதனையைச் செய்தது இல்லை என்ற புதிய சாதனைப் புள்ளிவிவரத்தையும் அவர் அவையில் பதிவு செய்தார்.
தொழில் முதலீடுகள் குறித்துத் தனக்கு முன்னால் அவையில் அடுத்தடுத்து எழுந்து நின்று தங்களைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசிய முன்னாள் அமைச்சர்களின் விமர்சனங்களை அவர் முற்றிலும் நிராகரித்தார். எதிர்க்கட்சியினர் அரசியல் காரணங்களுக்காகத் திட்டமிட்டுப் பரப்பும் அவதூறுகளுக்குத் தங்களின் அசுர வேக வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திட்டங்களே மிகச் சிறந்த சான்றாக விளங்கும் என்றும் அமைச்சர் கீர்த்தனா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
