LATEST NEWS
இப்போதான் நான் முதன்முறையா பாக்குறேன் சார்.. என்கிட்ட 70 வயசு பெரியவர் சொன்ன ரகசியம்.. சட்டப்பேரவையில் உதயநிதிக்கு சுட்டிக்காட்டிய அமைச்சர் புஸ்ஸி ஆனந்த்..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேரலை ஒளிபரப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கும், ஆளுங்கட்சி அமைச்சர் ஆனந்திற்கும் இடையே சுவாரசியமான காரசார விவாதம் அரங்கேறியுள்ளது. மக்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் பார்ப்பது குறித்து உதயநிதி ஸ்டாலின் சில விமர்சனங்களை முன்வைத்து பேசினார். இதற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து உடனே பதிலடி கொடுக்கப்பட்டது.
உதயநிதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து எழுந்த அமைச்சர் ஆனந்த், “70 வயதுடைய பெரியவர் ஒருவர் சமீபத்தில் என்னிடம் பேசும்போது, ‘சட்டப்பேரவையை இப்போது தான் என் வாழ்க்கையிலேயே முதன்முறையாக நேரலையில் பார்க்கிறேன். அங்கு மக்கள் நலனுக்காக என்னென்ன நடக்கிறது என்பது எனக்கு இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது’ என்று நெகிழ்ச்சியோடு கூறினார்” என அவையில் சுட்டிக்காட்டினார். மேலும், எதிர்க்கட்சித் தலைவர் நேரலை குறித்து தேவையில்லாத குற்றச்சாட்டுகளை வைப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆனந்த், முந்தைய ஆட்சிக்காலங்களைப் போலன்றி, தற்போதைய ஜனநாயக நடைமுறையை மேம்படுத்தும் வகையில் சட்டமன்ற நிகழ்வுகளை மக்கள் முன்னிலையில் தைரியமாக நேரலை ஒளிபரப்பு செய்வது தங்கள் முதலமைச்சர் தான் என்று பெருமிதத்துடன் கூறினார். இந்த நேரலை விவாதம் அவையில் இருந்த இருதரப்பு உறுப்பினர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
