LATEST NEWS
மறைந்த மகளின் பிறந்த நாளில்…. மனம் உருகி பதிவு போட்ட சின்னக்குயில் சித்ரா…. புகைப்படத்துடன் இதோ….!!!!
இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் கிட்டத்தட்ட 25,000 மேற்பட்ட பாடல்களை பாடியவர் சின்னக்குயில் சித்ரா. சுமார் 40 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பாடிவரும் இவர் ஏராளமான விருதுகளை குவித்துள்ளார். பிரபல பாடகியான இவர் கேரள மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவரின் இனிமையான குரலுக்கு மயியாதவர்கள் யாருமே கிடையாது. இதுவரை ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 25 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.
இவர் பாடிய மலர்கள் கேட்டேன், கொஞ்சி பேசிட வேணாம் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். பல்வேறு புகழுக்குரிய இவர் விஜய் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில வருடங்களில் இவர்களுக்கு நந்தனா என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அந்த குழந்தை எதிர்பாராமல் உயிரிழந்தது. அதாவது சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் திரைத்துறையினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது மகளின் பிறந்தநாள் அன்று சித்ரா பதிவு ஒன்றை வெளியிடுவார். அவ்வகையில் இன்று தனது மகளின் பிறந்தநாள் என்று குறிப்பிட்டு மகளின் அழகிய புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
— K S Chithra (@KSChithra) December 18, 2022