LATEST NEWS
“உதயநிதியை வரச்சொல்லுங்க” அவரை கைது பண்ணாம இங்கிருந்து ஒரு அடி கூட நகர மாட்டோம்… நீலாங்கரையில் இணை ஆணையர் விஜயகுமார் ஆவேசம்… உச்சகட்ட பதற்றத்தில் தமிழக அரசியல்..!!
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை உடனடியாக வந்து கைதாகச் சொல்லுங்கள் என்றும், அவரைத் தூக்காமல் நாங்கள் இங்கிருந்து ஒரு அடியும் நகரப் போவதில்லை என்றும் சென்னை நீலாங்கரை இல்லத்தில் முகாமிட்டுள்ள காவல் துறை இணை ஆணையர் விஜயகுமார் திமுக நிர்வாகிகளிடம் கறாராகத் தெரிவித்துள்ளார். “10 நிமிடம், 10 நிமிடம் என எவ்வளவு நேரம்தான் இழுத்தடிப்பீர்கள்? இன்னும் எவ்வளவு நேரமானாலும் சரி, உதயநிதி ஸ்டாலினை முறைப்படி கைது செய்யாமல் நாங்கள் இங்கிருந்து போக மாட்டோம்” என அவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். இதனால் உதயநிதி இல்ல வளாகத்திற்குள் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிகவும் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளது.
காவல் துறையினரின் இந்த அதிரடி மற்றும் பிடிவாதமான அணுகுமுறையால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் திமுக வழக்கறிஞர்கள், இணை ஆணையர் விஜயகுமாருடன் நேருக்கு நேர் நின்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதற்குள் அவசர அவசரமாகக் கைது செய்யத் துடிப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கிடையே, இணை ஆணையரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து நீலாங்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் கூடுதல் பலத்துடன் குவிக்கப்பட்டு வருவதால், எந்தக் கணத்திலும் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்ற உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
