LATEST NEWS
“அடுத்த ஜென்மம் எதற்கு..?” இந்த ஜென்மத்திலேயே அதை பண்ணுங்க.. முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவுறுத்தல்..!!
விவசாயிகளுக்கு நன்மை செய்ய அடுத்த ஜென்மம் எதற்கு, இந்த ஜென்மத்திலேயே நல்லது செய்யலாமே என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு நேரடியாக அறிவுறுத்தியுள்ளார். தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியான பின்னணியில், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்துத் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த பட்ஜெட்டில் வேளாண் துறை சார்ந்த தொழிற்சாலைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் ஏதேனும் வெளியாகும் எனத் தாங்கள் பெரிதும் எதிர்பார்த்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் இத்தகைய தொழிற்சாலைகள் குறித்த எந்தவொரு ஆக்கப்பூர்வமான அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றமளிப்பதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என விவசாயிகள் பல நாட்களாகத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவதை பிரேமலதா விஜயகாந்த் சுட்டிக்காட்டினார். உடலுக்கு ஆரோக்கியமான கள்ளை இறக்குமதி செய்வதற்கு அல்லது உள்நாட்டிலேயே இறக்குவதற்கு அரசு உரிய அனுமதி அளிக்கலாம் என்றும் அவர் இந்தச் செய்தியாளர் சந்திப்பின் வாயிலாகத் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
