LATEST NEWS
பகீர்…! ஒட்டுமொத்த தமிழ்நாடே குடிகார நாடா மாறப்போகுது.. ஆன்லைன் மது விற்பனைக்கு ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம்..!!
தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு செய்து வாங்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, தற்போதைய தவெக அரசை அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ பதிவில், மாநிலத்தில் மதுபான விற்பனையை எப்படியெல்லாம் புதிய உத்திகள் மூலம் உயர்த்துவது என்பது மட்டும்தான் தற்போதைய தவெக அரசின் முக்கிய கவலையாகவும் நோயமாகவும் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அரசின் இந்த புதிய ஆன்லைன் மது விற்பனைத் திட்டத்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் குடிகார நாடாக மாறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இளைஞர்களும் பொதுமக்களும் மிக எளிதாக மதுவை அணுகும் வகையில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சமூகச் சீரழிவிற்கே வழிவகுக்கும் என்றும், இத்தகைய செயல்பாடுகளால் எதிர்காலத்தில் நமது மாநிலத்தை ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்று பெருமையோடு அழைப்பதற்கு நமக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்குமா என்பதே தெரியவில்லை என்றும் தனது கடுமையான விவாதத்தை முன்வைத்துள்ளார்.
மதுவிலக்கு மற்றும் ஒழிப்பு குறித்துப் பேச வேண்டிய அரசு, அதற்கு மாறாக மது விற்பனையை டிஜிட்டல் மயமாக்கி ஊக்கப்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்று ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, மது மூலம் வருவாயைப் பெருக்குவதிலேயே இந்த அரசு குறியாக இருப்பதாகக் கூறிய அவர், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
