LATEST NEWS
“திமுகவின் ஒரு வாக்-அவுட்… பாஜகவுக்கு ஜாக்பாட்..!” டெல்லி பாராளுமன்றத்தில் அரங்கேறும் ரகசிய அரசியல்.. தொகுதி மறுவரையறையில் எதிர்பாராத திடீர் திருப்பம்.. அதிரும் அரசியல் களம்..!!
மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதாவைச் சட்டமாக்க சாதாரண பெரும்பான்மை போதாது; மாறாக அவைக்கு வருகை தரும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவு கட்டாயமாகும். 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதாவை வெற்றிகரமாகச் செலுத்துவதற்கு, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் குறைந்தபட்சம் 362 எம்பிக்களின் பலம் தேவையாக உள்ளது. இருப்பினும், தற்போதைய சூழலில் ஆளும்கட்சியின் கூட்டணி பலம் 318 ஆக மட்டுமே உள்ளது. இதனால் போதிய இடங்கள் இல்லாத காரணத்தால், எதிர்க்கட்சிகளின் உறுதியான ஆதரவைப் பெறாமல் தொகுதி மறுவரையறை மசோதாவைத் தனித்து நிறைவேற்ற முடியாத நெருக்கடி நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், திமுகவின் 22 மக்களவை உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது அவையிலிருந்து வெளிநடப்பு செய்தால், அவையில் இருக்கும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதனால், ஆளும் கூட்டணிக்குத் தேவையான 3-ல் 2 பங்கு பெரும்பான்மையைப் பெறுவதற்கான இலக்கு எளிதாகி, மசோதா நிறைவேறும் சூழல் உருவாகலாம். தென்னகத்தின் தொகுதி எண்ணிக்கையைக் குறைக்கும் எனக் கூறித் தொகுதி மறுவரையறையைத் தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வரும் திமுக, வெளிநடப்பு செய்து மறைமுகமாக மசோதா நிறைவேற வழிவகுக்குமா அல்லது நேரடியாக எதிராக வாக்களித்து மசோதாவைத் தோற்கடிக்குமா என்ற கேள்வி தேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
