LATEST NEWS
ஆபாசமா பேசுறதுக்கு முன்னாடி… உங்க வீட்டுப் பெண்களிடம் கேட்டுட்டு வந்து பேசுங்க… உதயநிதிக்கு சபாநாயகர் பிரபாகர் மறைமுக அதிரடி குட்டு..!!
“சட்டப்பேரவையில் ஆபாசமாகப் பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவைக்கு வருவதற்கு முன் தங்கள் வீட்டுப் பெண்களிடமும் குடும்ப உறுப்பினர்களிடம் இப்படிப் பேசுவது சரியா எனக் கேட்டுக்கொள்ள வேண்டும்” என்று பேரவைத் தலைவர் பிரபாகர் அவையில் மிகக் கடுமையான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். பெண்கள் குறித்து அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசிய புகாரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டிருந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் சபாநாயகர் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரின் விவாதத்தின் போது உறுப்பினர்களின் பேச்சுவார்த்தை தரம் குறித்து எழுந்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய சபாநாயகர் பிரபாகர், மக்கள் பிரதிநிதிகள் பொதுவெளியிலும் அவையிலும் பேசும் போது தங்களது கண்ணியத்தைக் காக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பேச்சில் சுயக்கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அவையின் மரபுகளை மீறி ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
பெண்கள் பாதுகாப்பு மற்றும் கண்ணியம் குறித்து அவையில் விவாதிக்கப்பட்ட நேரத்தில் சபாநாயகர் தெரிவித்த இந்தக் கருத்துக்கள், கைது நடவடிக்கைக்கு உள்ளாகியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மறைமுகமாகக் குட்டு வைக்கும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சபாநாயகரின் இந்த அதிரடி அறிவுறுத்தல் தற்பொழுது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
