LATEST NEWS
அதிகாலையில் கேட்ட சத்தம்.. ஹோட்டல் ரூமுக்கு வெளியே நின்ற மேனேஜர்.. விஜய் டிவி சீரியல் நடிகைக்கு நடந்த சம்பவம்…!!

பிரபல சின்னத்திரை நடிகையான சியமந்தா கிரண் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னை தொடும், ஈரமான ரோஜாவே, ஆயுத எழுத்து, சன் டிவியில் ஒளிபரப்பான நிலா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து புகழ்பெற்றார்.
இவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.43 லட்சம் பாலோயர்ஸ் இருக்கின்றனர். இந்நிலையில் சியமந்தா கிரண் திருச்சியில் இருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ளார். அவர் early check-in வேண்டும் என முன்பு கேட்டிருந்தார். ஆனால் ஹோட்டலுக்கு சென்றபோது இது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
அதற்கு கூடுதல் பணம் செலுத்துவது தொடர்பாக சியமந்தா கிரண் மற்றும் ஹோட்டல் ஊழியர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் காலை 5:30 மணிக்கு ஹோட்டல் ஊழியர்கள் தொடர்ந்து சியமந்தா கிரணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு எப்போது காலி செய்வீர்கள் என கேட்டு தொந்தரவு செய்தனர்.
மறுநாள் காலை ஐந்து மணிக்கு ஹோட்டல் மேனேஜர் அறை கதவை தட்டி சியமந்தா கிரணிடம் உங்களது டைம் முடிந்துவிட்டது காலி பண்ணுங்க என பலமுறை தகராறு செய்துள்ளார். இது குறித்து சியமந்தா கிரண் கோபமாக இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டார்.