LATEST NEWS
“பசியோடு இருப்பவருக்குக் கொடுங்கள்…!” மும்பையில் இருந்து டெல்லி போராட்டக்களத்திற்கு இலவச உணவு… ஒரே ஒரு ஆர்டரால் இந்தியாவின் மனங்களையே வென்ற மும்பைவாசி..!!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த அனுஜ் ராவத் என்ற நபர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்களுக்காகச் செய்த நெகிழ்ச்சியான காரியம் இணையத்தில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அவர் மும்பையிலிருந்தபடியே ஜோமேட்டோ செயலியைப் பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்து, ஜந்தர் மந்தரில் உள்ள போராட்டக்காரர்களுக்கு இலவசமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான கட்டணத்தை அவரே முன் கூட்டியே செலுத்திவிட்டதால், அங்குள்ள மக்கள் எந்தக் கட்டணமும் இன்றி உணவைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஜோமேட்டோ உணவு விநியோக ஊழியர் ஒருவர் மழையில் நனைந்தபடியே ஒரு பெரிய உணவுப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு ஜந்தர் மந்தர் பகுதிக்கு வருவதைக் காண முடிந்தது. பொதுவாக ஒரு தனிநபருக்கு மட்டுமே உணவு விநியோகிக்கப்படும் நிலையில், அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்களுக்காக உணவு கொண்டு வரப்பட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “பசியோடு இருப்பவர்களுக்குக் கொடுங்கள்” என்ற கோரிக்கையுடன், பல நூறு கிலோமீட்டர் தூரத்திலிருந்து அனுப்பப்பட்ட இந்த உதவி மக்கள் மனதை நெகிழச் செய்துள்ளது.
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அந்த மும்பை நபரின் கருணையையும் மனிதநேயத்தையும் பாராட்டி கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். “நாம் இழக்க விரும்பாத இந்தியா இதுதான்” என்றும், “சாமானிய மக்களின் இத்தகைய உதவிகளே உண்மையான இந்தியாவின் அடையாளம்” என்றும் இணையவாசிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிலர், இதுபோன்ற இடங்களில் போராடுபவர்களுக்குப் பொதுமக்கள் எளிதாக உணவு அனுப்பும் வகையில் ஜோமேட்டோ, ஸ்விகி போன்ற நிறுவனங்கள் சிறப்புச் சலுகைகளையோ அல்லது புதிய வசதிகளையோ அறிமுகப்படுத்தலாம் என்றும் தங்களது விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர்.
