LATEST NEWS
“இந்தச் சமூகத்தில் ஆண்பிள்ளைகளே இல்லையா..?” தந்தையை இழந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பெண் காவலரே செயத வெறி செயல்… இணையத்தை உலுக்கும் இளம் பெண்ணின் கண்ணீர் வீடியோ!..!!
ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த தனிஷ்கா தாக்கூர் என்ற இளம் பெண், தனது தந்தை மறைந்த பிறகு குடும்பத்துடன் சந்தித்து வரும் கொடுமைகள் குறித்துக் கண்ணீர்மல்க உதவி கேட்டு வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடியாட்கள் சிலர் காவல்துறையினரின் முன்னிலையிலேயே தங்களை மிரட்டியதாகவும், பாதுகாப்பிற்கு நிற்க வேண்டிய பெண் காவலர் ஒருவரே தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
इंदौर: रोते हुए राजपूत समाज की बेटी ने लगाई मदद की गुहार
तनिष्का ठाकुर ने आरोप लगाया कि दबंगों ने पुलिस के सामने उन्हें धमकाया और महिला पुलिसकर्मी ने भी उनके साथ मारपीट की पिता के निधन के बाद परेशान बेटी ने रोते हुए कहा क्या समाज का कोई भी आदमी हमारी मदद नही करेगा?” pic.twitter.com/AJsC7uIuXN— The Thakur Force (@thethakurforce) August 7, 2026
தந்தையை இழந்து தவிக்கும் தங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்றும், அநீதியை எதிர்த்து நிற்க முடியாமல் தவிப்பதாகவும் வேதனையுடன் கூறியுள்ள அந்தப் பெண், “இந்தச் சமூகத்தில் எங்களுக்கு உதவ எந்த ஒரு ஆணும் முன்வர மாட்டார்களா?” என உலகச் சமுதாயத்திடம் கண்ணீருடன் கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் இந்த உருக்கமான வேண்டுகோளும், காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன.
