LATEST NEWS
“இது என்ன கொடூரம்.. திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த தாய்…” ஆட்டிசம் மகனுக்கு நடந்த கொடூரம்.. பள்ளியில் ஆசிரியர்கள் செய்த மனிதாபிமானமற்ற காரியம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர், ஆட்டிசம் குறைபாடுடைய (Autistic) தன் மகனின் கற்கும் திறன் பள்ளியில் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதை உணர்ந்து மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால், பள்ளியில் என்னதான் நடக்கிறது என்பதை நேரில் அறிய ஒருநாள் அவர் யாருக்கும் தெரிவிக்காமல் திடீரென பள்ளிக்குச் சென்றார். அங்கு வகுப்பறைக்குள் நுழைந்த தாய்க்கு ஒரு அதிர்ச்சியூட்டும் உண்மை தெரியவந்தது; அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் சிறுவனின் ஆட்டிசம் நிலையை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல், அவனைத் தவிர்ப்பதற்காக வகுப்பறையிலேயே ஒரு பாயை விரித்து, வலுக்கட்டாயமாக அவனைத் தூங்க வைப்பதை அந்தத் தாய் நேரில் கண்டார்.
ام برازيلية لاحظت ان ابنها التوحدي لا تتقدم مهاراته في المدرسه وذها به كعودته فقررت يوم تطب عليهم فجأة واكتشفت ان المعلمين يفرشون له حصيرة في الفصل ويجبرونه على النوم لتجنب التعامل مع مرضه، في
المقطع هنا غاضبه وتهدد بالشكوى pic.twitter.com/EICiBCSYUr— عزيز (@nmr2776) August 20, 2026
தன் பிள்ளைக்கு நேர்ந்த இந்த அநீதியைக் கண்டு அந்தத் தாய் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார். பள்ளியின் இந்த அலட்சியமான செயலால் கோபமடைந்த அவர், அங்கிருந்த ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தையும் சரமாரியாகக் கேள்வி கேட்டுத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும், இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு எதிராகப் பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்பூர்வமாகப் புகார் அளிக்கப் போவதாக அவர் ஆவேசமாக எச்சரிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
