LATEST NEWS
நான் இன்று இந்த நிலையில் இருக்க இவங்க தான் முக்கிய காரணம்…. மனம் உருகி பதிவு போட்ட இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்….!!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் ஹாரிஸ் ஜெயராஜ். இவர் முதன்முதலாக தமிழ் சினிமாவில் மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன் பிறகு இவருடைய இசையில் வெளியான காக்க காக்க, வாரணம் ஆயிரம் மற்றும் நண்பன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் கொடுத்தன. தற்போது இவர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் JR 30 என்ற திரைப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.
இந்நிலையில் இவர் தன்னுடைய பெற்றோருக்கு நன்றி தெரிவித்து அவர்களுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட ஒரு அழகிய புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தனது இரண்டு வயதில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் இன்று இப்படி ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு பெற்றோர் தான் முக்கிய காரணம் எனவும் அவர் கூறி அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
On this day I would like to thank my Parents for what I am today. My father taught me Music and my mom taught me to show love and stay humble. (I was 2 years with my family in front of our house). pic.twitter.com/PmKVN5Pt3l
— Harris Jayaraj (@Jharrisjayaraj) January 8, 2023