LATEST NEWS
“பாஜக காலில் விழும் திமுக..?!” எதற்கு தெரியுமா..? மொத்தமாக போட்டு உடைத்த தவெக அருண்ராஜ்.. சூடான அரசியல் களம்..!!
கடந்த ஆட்சி காலத்தில் செய்த ஊழல்களின் காரணமாக, பாரதிய ஜனதா கட்சியின் பிடியில் திமுக விழ வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டுள்ளதாகக் தவெகவைச் சேர்ந்த அமைச்சர் அருண்ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற தத்துவத்தை ஒருவேளை ஏற்றுக் கொண்டாலும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் கொள்கை என்பது மிகவும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். திமுகவின் தற்போதைய நகர்வுகள் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகள் அதன் பழைய கொள்கைகளுக்கு முரணாக இருப்பதைச் சுட்டிக்காட்டி அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்தார்.
முன்னதாக, பாஜக குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திமுக எம்பி கனிமொழி சோமு, அரசியலில் யாருமே நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை எனக் கூறியிருந்தார். அவருடைய இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே அருண்ராஜ் இவ்வாறான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கடந்த கால ஊழல் வழக்குகளின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காகவே திமுக தங்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளை விட்டுக்கொடுத்து பாஜகவுடன் இணக்கமான சூழலை உருவாக்க முயல்வதாக அருண்ராஜ் தனது பேச்சில் குற்றம்சாட்டினார்.
