LATEST NEWS
“கே.என்.நேரு அதிரடி கைது..?” அமலாக்கத்துறை கொடுத்த ‘அந்த’ ஒரு ரகசியப் புகார்.. அதிர்ச்சியில் திமுக தலைமை..!!
ரூ.1,000 கோடி டெண்டர் முறைகேடு தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள புதிய ஊழல் வழக்கில், திமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு ஏ1 குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமலாக்கத்துறை அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இந்த அதிரடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊழல் தொடர்பான ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அனைத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தற்பொழுது அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் முறையாக ஒப்படைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் அமலாக்கத்துறையின் கூட்டுப் புலனாய்வு தீவிரமடைந்துள்ளதால், கே.என்.நேரு எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
