TRENDING
திருமணத்திற்காக சென்ற பெற்றோர்கள் ..!! வீட்டில் இருந்த 4 குழந்தைகள் மற்றும் 1 பெண் உட்பட நேர்ந்த பரிதாபம் ..??கதிகலங்க வைத்த சம்பவம் ..
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் லோனி பகுதியைச் சேர்ந்த 5 சகோதரர்கள் 3 மாடி கட்டிடம் கொண்ட வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சொந்த ஊரான மீரட் ஜானியில் நடக்கும் திருமணத்திற்காக சகோதரருக்கு சென்று உள்ளனர். அதனால் அவர்கள் தங்களது குழந்தைகளை அத்தை பர்வீனின் பொறுப்பில் விட்டு சென்று உள்ளனர். அந்த 5 குழந்தைகளும் எப்பொழது அத்தை வீட்டிற்கு வந்தாலும் அவர்கள் அருகில் இருக்கும் முகமது சாஜித் வீட்டிற்கு செல்வார்கள்.
சகோதரர்கள் மறுநாள் காலை திருமணம் முடிந்து தங்கள் குழந்தைகளை கூட்டி செல்ல அத்தை வீட்டிற்கு வந்தனர் .ஆனால் வீடுதிறக்க வில்லை என்பதால் முஹமது என்பவர் வீட்டிற்கு சென்று பார்த்தபொழுது புகைமூட்டமாக இருந்து உள்ளது. மேலும் உள்பக்கம் தாழ்போட்டு இருந்ததால் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அங்குள்ள பிரிட்ஜ் மற்றும் டிவியில் மின்கசிவு ஏற்பட்டு அவர்கள் மூச்சி திணறி உயிர் இழந்து உள்ளனர். போலீசார் அவர்களின் சடலத்தை எடுத்து கொண்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது.