Uncategorized
காதல் ஜோடிக்கு மாட்டின்… “கழிவு நீரை கொடுக்கும் தண்டனை உத்திரபிரதேசத்தில்”…. ‘நடந்த காட்டு மிராண்டிதனம்’…!!
உத்திரபிரசேத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூபேஷ்-ஆஷா என்ற காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர் இந்தநிலையில் இருவரும் வெவ்வேறு ஜாதியினை சேர்ந்தவர்கள் இதனால் பஞ்சாயத்தார்கள் திருமணமான தம்பதியினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர் மேலும் இவர்களுடன் கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும் பேசக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதனையடுத்து சிலமாதங்கள் கழித்து தற்போது மீண்டும் பஞ்சாயத்து கூடியது அதில் கலந்து கொண்ட பூபேஷ்-ஆஷா தம்பதியின் எங்களை மீண்டும் கிராமத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பஞ்சாயத்துக்காரர்கள் பதிலுக்கு இரு நிபந்தனையை விதித்தனர் அதில் ஒன்று நீங்கள் இருவரும் மாட்டு கோமியத்தை குடிக்கவேண்டும் அப்படி இல்லையென்றால் ஊர் பஞ்சாயத்திற்கு ரூபாய் 5 லட்சம் கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தனர்.
இதனால் மனவேதனை அடைந்த பூபேஷ்-ஆஷா தம்பதியின் காவல்துறையிடம் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.