LATEST NEWS
“என்னடா இப்படி பண்றீங்க..?” தண்டவாளத்தில் போதை ஆசாமி செய்த வேலை…கடைசி நொடியில் லோகோ பைலட் செய்த அதிசயம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் சீதாபூர்-பாலமௌ ரயில் பாதையில், அத்வா முத்தியா மற்றும் கமல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ஒரு பெரும் ரயில் விபத்து லோகோ பைலட்டின் விழிப்புணர்வால் தவிர்க்கப்பட்டது. கடுமையான மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, தண்டவாளத்திற்கு அருகே சென்று ஓடும் ரயிலின் சக்கரங்களுக்கு அடியில் விழுந்தார். இதனை ரயிலின் பக்கவாட்டு கண்ணாடியில் தற்செயலாகக் கவனித்த லோகோ பைலட், ஒரு நொடியும் தாமதிக்காமல் உடனடியாக அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.
https://www.instagram.com/reel/DbKgfF6xDUd/?utm_source=ig_web_button_share_sheet
ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்த ரயில்வே ஊழியர்களும் உள்ளூர் கிராம மக்களும் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகு, ரயிலின் பெட்டிகளுக்கு அடியில் சிக்கியிருந்த அந்த இளைஞனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டனர். அதிர்ஷ்டவசமாகவும் ஓட்டுநரின் விரைவான முடிவாலும் உயிர் தப்பிய இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போதையில் தண்டவாளம் பக்கம் செல்வது உயிருக்கே ஆபத்து என்பதை உணர்த்தும் இச்சம்பவத்தில், சாதுரியமாகச் செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய லோகோ பைலட்டின் விழிப்புணர்வைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
