LATEST NEWS
“அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு!” தஞ்சாவூர் சாலை மறியலில் என்ன நடந்தது..?! கைதுக்கு பின் ரிலீஸான வாலிபர் உடைத்த அசல் உண்மை..!!
தஞ்சாவூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்புப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீது ஆளுங்கட்சிக் கூட்டணிக் கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்திய அதிரவைக்கும் விபரீதச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “என் வேலையே வெறுத்துப் போச்சு.. அரசாங்கக் கூட்டணியில் இருந்துகொண்டு இவங்க பண்ணுற அராஜகம் தாங்க முடியல; நான் காக்கிச் சீருடையில் இருக்கும்போதே என் மீது போலீஸ் முன்னிலையிலேயே தாக்குதல் நடத்தியது மிகப்பெரிய அநாகரிகம்” என்று பாதிக்கப்பட்ட அந்தப் போலீஸ் அதிகாரி தனது மனக் குமுறலைக் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார். முறையான ஆவணங்களின்றி விதிகளுக்கு மாறாகச் செயல்பட்ட ஆளுங்கட்சிக் கூட்டணி ஆசாமிகளைப் போலீஸார் தடுத்து நிறுத்த முயன்றபோது, அதிகாரத் தோரணையில் வந்த கும்பல் சட்ட ஒழுங்கைக் கையில் எடுத்து இந்த வன்முறையை நிகழ்த்தியுள்ளது.
”எனக்கு வேலையே போச்சு… அந்த கட்சிக்காரங்க மேல தான் தப்பு.. ஆட்சியில கூட்டணி கட்சியா இருந்து இப்படி அராஜகம் பண்றாங்க… நான் யூனிபார்ம்ல இருந்த போலீச அடிச்சது தப்பு தான்..”
தஞ்சாவூரில் வி.சி.க மறியல் போராட்டத்தின் போது நடந்தது என்ன? சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது ஏன்?… pic.twitter.com/WKV2skRifi— Polimer News (@polimernews) August 25, 2026
இச்சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட வாலிபர் ஒருவர், அன்று நள்ளிரவு காவல் நிலையத்திலும் போராட்டக் களத்திலும் விசிகவினர் நடத்திய அராஜகத்தின் அசல் முழுப் பின்னணியையும் ஓப்பனாகப் போட்டுடைத்துள்ளார். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த டயல் 112 மூலம் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்ட போதிலும், அவர்கள் காட்டிய மெத்தனப் போக்கால் தான் காக்கிச் சீருடை அணிந்த அரசு ஊழியர் மீதே இந்த இரத்தக் களரித் தாக்குதல் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக் கூட்டணியினர் காவல்துறையினரையே மிரட்டும் அவல நிலை குறித்துப் பலரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
