LATEST NEWS
தளபதிக்கு இணையாக … சம்பளம் கேட்கும் YASH… எந்த வேடத்திற்கு தெரியுமா…?

பிரபல இந்தி இயக்குநர் நித்தேஷ் திவாரி ராமாயணக் கதையை 3 பாகங்களாக இயக்கவுள்ளார். இதில் ராமனாக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும் நடிக்கின்றனர். சீதாவாக சாய் பல்லவி நடிக்கிறார். சீதையாக ஆலியா பட் நடிப்பதாக முதலில் கூறப்பட்டது. பின்பு அவர் விலகியதால், சாய் பல்லவி இவ்வேடத்தில் நடிக்கிறார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஜூலை மாதம் இதன் படப்பிடிப்பில் நடிகர் யாஷ் கலந்து கொள்கிறார். அவர் தொடர்பான காட்சிகள் இலங்கையில் படமாக்கப்பட இருக்கின்றது. இந்த படத்தில் நடிக்க நடிகர் யாஷ் ரூ.150 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவருக்கு எத்தனை நாட்களுக்கு கால்ஷீட் தேவை என்பதைப் பொறுத்து இந்த சம்பளம் மாறும் என பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன.