LATEST NEWS
பகீர்..! இப்படி நடக்கும்னு நினைசிச்சிருக்கவே மாட்டாங்க.. தோழியுடன் மளிகைக் கடைக்குச் சென்ற 9ஆம் வகுப்பு மாணவி… திடீரென தலையில் விழுந்த மின்கம்பம்… சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான் காட்சி…!!
ஹர்தோயில், 9 ஆம் வகுப்பு படிக்கும் ராகினி சுக்லா என்ற மாணவி, தன் தோழியுடன் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக அருகில் உள்ள மளிகைக் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக திடீரென ஒரு மின்கம்பம் ராகினியின் மீது சரிந்து விழுந்தது.
இந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த ராகினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ஷ்டவசமாக, அவருடன் சென்ற தோழி இந்த விபத்தில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.
அப்பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று அங்கிருந்த மின்சார ஒயர்களில் சிக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட கடும் இழுவிசை காரணமாகவே அந்த மின்கம்பம் அடியோடு சாய்ந்து ராகினியின் மீது விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
