LATEST NEWS
“முறையான கைது வாரண்ட் எங்க?” உதயநிதி வீட்டுக்குள் புகுந்த போலீசாரை மறித்த மா.சுப்பிரமணியம்.. நீலாங்கரையில் பெரும் பரபரப்பு…!!
சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்குள், முறையான வழக்கு விவரங்களையோ அல்லது உரிய ஆவணங்களையோ வழங்காமல் அவரைக்கைது செய்ய முற்பட்ட காவல் துறையினருடன் திமுக முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் பொதுக்கூட்டப் பேச்சு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் சட்டபூர்வ விவரங்களை முன்வைக்காமல், அவசர அவசரமாகக் கைது நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறை முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார். உச்ச நீதிமன்ற விதிமுறைகளைப் பின்பற்றாமல் எதிர்க்கட்சித் தலைவரை முடக்க நினைப்பது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என மா. சுப்பிரமணியம் போலீசாரிடம் நேருக்கு நேர் வாதிட்டார்.
காவிரி நீர் விவகாரம் தொடர்பான திமுகவின் போராட்டங்களை மழுங்கடிக்கவே ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழக அரசு இத்தகைய அடக்குமுறைகளைக் கையில் எடுத்துள்ளதாக உதயநிதி தரப்பு வழக்கறிஞர்களும் அங்கு முழக்கமிட்டனர். முறையான நீதிமன்ற வாரண்ட் அல்லது உரிய சட்ட விளக்கம் இன்றி உதயநிதி ஸ்டாலின் கைதாக மறுப்பு தெரிவித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், மா. சுப்பிரமணியம் மற்றும் திமுக மூத்த நிர்வாகிகள் காவல் துறையினரின் நடவடிக்கைக்குத் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இந்த திடீர் மோதல் போக்கால் நீலாங்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதால், அப்பகுதியே தற்போது போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.
