CINEMA
மோகன்லாலுடன் நடிக்க மறுத்த நடிகை ஜோதிகா… இதுதான் காரணமா..? ரசிகர்கள் ஷாக்..!!
நடிகை ஜோதிகா சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.. திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நடிகர் மோகன்லால் நடிப்பில் துடரும் என்ற படம் ரிலீஸ் ஆகியுள்ளது.
அதில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை தான் முதலில் அணுகினாராம் இயக்குனர் தருண். அப்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் சேர்ந்து தான் கதை கேட்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் கேட்ட தேதியில் தான் உலக சுற்றுலா செல்ல இருப்பதாக கூறி மோகன்லால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். அதன் பிறகு தான் நடிகை ஷோபனாவிடம் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். அவரும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டாராம்.