“அதிமுகவிலிருந்து மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் காலி..?!” செங்கோட்டையன் போட்ட மெகா குண்டு.. நள்ளிரவில் அதிரும் இபிஎஸ் கோட்டை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“அதிமுகவிலிருந்து மேலும் 10 எம்.எல்.ஏ-க்கள் காலி..?!” செங்கோட்டையன் போட்ட மெகா குண்டு.. நள்ளிரவில் அதிரும் இபிஎஸ் கோட்டை..!!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின்அண்மைக்கால கட்சி நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய கே.ஏ. செங்கோட்டையன், “அதிமுகவைச் சேர்ந்த மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் விரைவில் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணையவுள்ளனர்” என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள சூழலில், செங்கோட்டையனின் இந்த புதிய அறிவிப்புக்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் கணக்கு ஒளிந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்குகின்றனர். இந்த அதிரடித் தாவல்களின் மூலம் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்து, தமிழ்நாட்டில் தவெகவின் அசைக்க முடியாத ஆதிக்கத்தை நிலைநிறுத்த அக்கட்சியின் தலைமை மாஸ்டர் பிளான் போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுகவிலிருந்து விலகிய 6 பேருடன் சேர்த்து மொத்தம் 16 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், தற்போதைய அரசியல் அலையில் தவெக அனைத்து இடங்களிலும் அமோக வெற்றி பெறும் எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அப்படி 16 தொகுதிகளிலும் தவெக வெல்லும் பட்சத்தில், தற்போது ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் விஜய் அரசு, தங்களது கூட்டணிக் கட்சிகளின் எந்தவொரு நிபந்தனையோ அல்லது ஆதரவோ இல்லாமலேயே சட்டசபையில் தனிப் பெரும்பான்மையுடன் பவர்ஃபுல்லாக ஆட்சியைத் தொடர முடியும் என அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். கூட்டணிக் கட்சிகளின் பிடியிலிருந்து விடுபட்டு, முழுமையான சுதந்திரத்துடன் தவெக ஆட்சியைத் தனித்து வழிநடத்தவே இந்த 16 தொகுதி இடைத்தேர்தல் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகக் கோட்டை வட்டாரத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் வெடித்துள்ளன.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in