LATEST NEWS
“புதைக்கப்பட்ட சடலம்…” 16-வது நாள் காரியத்திற்கு சென்ற போது அதிர்ச்சி… தோண்டப்பட்டுக் கிடந்த குழியால் அம்பலமான நள்ளிரவுக் கொடூரம்…. பகீர் சம்பவம்…!!
கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த 60 வயதான மீன் வியாபாரி நாகராஜ் என்பவர் அண்மையில் காலமானதைத் தொடர்ந்து, அவர் எப்போதும் ஆசையோடு அணிந்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியுடனேயே அவரது உடல் உள்ளூர் மாநகராட்சி மயானத்தில் புதைக்கப்பட்டது. நாகராஜின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அண்டை வீட்டார்களான சக்தி வேல் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும், பண நெருக்கடி காரணமாக அந்த நகையைத் திருடத் திட்டமிட்டு நள்ளிரவில் சுடுகாட்டிற்குச் சென்றுள்ளனர். அங்கு பணியில் இருந்த கார்த்திகேயன் என்பவருக்கு 30,000 ரூபாய் பண ஆசை காட்டித் தங்களது வசமாக்கிக் கொண்டு, புதைக்கப்பட்ட குழியைத் தோண்டி சடலத்தின் கழுத்தில் இருந்த தங்க நகையைக் கொள்ளையடித்துச் சென்று விற்றுப் பங்கீடும் செய்துள்ளனர்.
இறந்தவரின் 16-ஆம் நாள் சடங்கிற்காகக் கல்லறையைச் சுத்தம் செய்ய வந்த நாகராஜின் மகன் வெங்கடேஷ்குமார் மற்றும் உறவினர்கள், குழி தோண்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து விசாரித்தபோது இக்கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. மயான ஊழியர் கார்த்திகேயன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள சக்திவேல் மற்றும் மணிகண்டன் உள்ளிட்ட மூன்று பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த வினோத திருட்டு வழக்கு குறித்துப் போலீசார் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
