LATEST NEWS
“நிஜ உலகின் இளவரசி இவரே” கையில் மரநாய், பின்னால் ஓடி வரும் முள்ளம்பன்றி… நெட்டிசன்களை வியக்க வைத்த வைரல் சிறுமி… யார் இவர்.??
பச்சை பசேலென இருக்கும் நெல் வயல்களுக்கு இடையே ஒரு சிறிய முள்ளம்பன்றியுடன் (Porcupine) ஒரு சிறுமி நடந்து செல்லும் நெஞ்சை உருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளஞ்சிவப்பு நிற உடையில் இருக்கும் அந்தச் சிறுமி, ஒரு சிறிய மரநாய் (Civet cat) போன்ற விலங்கைக் கையில் பிடித்துக் கொண்டு, தன் பின்னால் ஓடி வரும் முள்ளம்பன்றியுடன் துள்ளிக்குதித்து ஓடுகிறாள். இயற்கையோடு கலந்த இந்த அழகிய காட்சி பலரையும் கவர்ந்துள்ளதால், நெட்டிசன்கள் அவளை “நிஜ உலக டிஸ்னி இளவரசி” என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
இந்த வீடியோவில் உள்ள பசுமையான நெல் வயல்களும், தென்னை மரங்களும் நிறைந்த கிராமப்புற பின்னணி பார்ப்பதற்கு மிகவும் அமைதியாகவும், அழகாகவும் அமைந்துள்ளது. சிறுமி எந்தவொரு பயமும் இன்றி வனவிலங்குகளுடன் பழகும் விதம் மற்றும் அவளைத் தொடர்ந்து வரும் முள்ளம்பன்றியின் அமைதியான குணம் ஆகியவை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. பல பயனர்கள் “இது போன்ற தருணங்களுக்கு எந்தவொரு கிராபிக்ஸ் காட்சிகளும் தேவையில்லை” என்றும், “இது ஒரு தூய்மையான உலகத்தைக் காட்டுகிறது” என்றும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.
https://www.facebook.com/reel/2140360846757821
இருப்பினும், இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து சமூக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதமே நடந்து வருகிறது. தொடக்கத்தில் பிரபாத் சில்வா என்பவரால் பகிரப்பட்டு, இது இலங்கையைச் சேர்ந்த சிறுமியின் வீடியோ என்று கூறப்பட்டது. ஆனால், வங்காளதேசத்தைச் சேர்ந்த பல இணையவாசிகள், அந்தச் சிறுமி பேசுவது வங்காள மொழி என்றும், இந்த வீடியோ தங்களது நாட்டைச் சேர்ந்தது என்றும் வாதிட்டு வருகின்றனர். இந்த இடப் சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் இந்த வீடியோவின் அழகையும் அதன் நேர்மறையான செய்தியையும் மட்டுமே ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.
