LATEST NEWS
“ரூம் போட்டு யோசிப்பாங்களோ?.. காதலியுடன் ஜாலியாக கெஸ்ட் ஹவுஸ் சென்ற கணவன்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மனைவி.. நடுரோட்டில் நடந்த மாஸ் கிளைமாக்ஸ்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ”..!!
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலியில், கணவர் ஒருவர் தனது காதலியுடன் தங்குவதற்காக விடுதி ஒன்றில் அறை முன்பதிவு செய்திருந்தார். திட்டமிட்டபடி அவர் தனது காதலியுடன் அறைக்கு வந்தபோது, தன் மனைவி தங்களை ரகசியமாகப் பின்தொடர்ந்து வருவதை கவனித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், மனைவியின் கண்ணில் படாமல் விடுதியை விட்டு நழுவ முயன்றார். ஆனால், அதற்குள் அவரது மனைவி, கணவரை அவரது காதலியுடன் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்.
UP- चंदौली में एक पति अपनी गर्लफ्रैंड के साथ गेस्ट हाउस का कमरा बुक किया था. कमरे में गर्लफ्रैंड के साथ पहुंचने पर उसे पता चला कि उसकी पत्नी पीछे आ रही है. वह गेस्ट हाउस से निकल पाता उससे पहले ही पत्नी ने उसे रास्ते में दबोच लिया. फिर जो हाईवोल्टेज ड्रामा और मारपीट हुई.. क्या… pic.twitter.com/AydImlWKn1— Narendra Pratap (@hindipatrakar) July 19, 2026
அதனைத் தொடர்ந்து அங்கு அரங்கேறிய ஹை-வோல்டேஜ் நாடகமும் மோதலும் அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தது. கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற மனைவி, கணவரையும் அவரது காதலியையும் நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கினார். அங்கிருந்த மக்கள் இந்த மோதலை வேடிக்கை பார்க்கத் திரண்ட நிலையில், அந்த கணவர் மனைவியின் பிடியிலிருந்து ஒருவழியாகப் போராடி உயிர் தப்பி ஓடினார். இந்த வினோத மோதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
