LATEST NEWS
“பிரதமர் மோடியை சுட்டுக் கொல்வேன்!”.. பகிரங்க மிரட்டல் விடுத்த நபர்… இணையத்தில் தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ..!!
டெல்லியில் நடைபெற்ற சி.ஜே.பி போராட்டத்தின் போது, இளைஞர் ஒருவர் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை மிகக் கடுமையான மற்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்து பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. “என் கையில் கிடைத்தால் உன்னைச் சும்மா விடமாட்டேன், சுட்டுக் கொன்றுவிடுவேன்” என்று பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அந்த இளைஞர் பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.
Gems of so called peaceful protest at Jantar Mantar : A thread 🧵
1) NEET Student respectfully criticizing PM Modi ji pic.twitter.com/FXD2902mCi— UmdarTamker (@UmdarTamker) July 22, 2026
ஜனநாயக ரீதியிலான போராட்டங்களில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நாட்டின் உயர் பதவியில் இருக்கும் பிரதமருக்கு எதிராக இத்தகைய வன்முறை மற்றும் அச்சுறுத்தும் மொழியைப் பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்த கண்ணியமான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, இதுபோன்ற வெறுப்புப் பேச்சுக்களில் ஈடுபடக் கூடாது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
