LATEST NEWS
சூப்பர் யோகம்… குரு உதயத்தால் இனி இந்த 4 ராசிக்கு பண மழை பொழியப் போகுது…! இதுல உங்க ராசி இருக்கா..?!
ஜோதிட சாஸ்திரப்படி தேவர்களின் குருவாக விளங்கும் குரு பகவான், ஆகஸ்ட் 12 அன்று கடக ராசியில் உதயமாகவுள்ள நிலையில், இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டாலும் தனுசு, மகரம், மிதுனம் மற்றும் மீனம் ஆகிய 4 ராசியினருக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் சிறப்பான யோகமும் அதிர்ஷ்டமும் கிடைக்கவுள்ளது. இதில் தனுசு ராசியினருக்கு 8-வது வீட்டில் குரு உதிப்பதால் உழைப்பிற்கேற்ற பலன், வருமான உயர்வு மற்றும் தடைபட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
அதேபோல மகர ராசியினருக்கு 7-வது வீட்டில் குரு உதிப்பதால் எதிர்பாராத பணவரவு, ரியல் எஸ்டேட் மற்றும் கூட்டுத்தொழிலில் நல்ல லாபம், அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் பொன் பொருள் சேரும் யோகம் உண்டாகும். மிதுன ராசியினருக்கு 2-வது வீட்டில் குரு உதயமாகி முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளையும், தொழிலில் லாபகரமான ஒப்பந்தங்களையும், வருமானத் தடைகள் விலகி வலுவான பொருளாதார நிலையையும் தருவார். மேலும் அனுபவசாலிகளின் ஆலோசனைகள் இவர்களுக்கு எதிர்கால உயர்வுக்குப் பெரிதும் உதவும்.
மீன ராசியினருக்கு 5-வது வீட்டில் குரு உதிப்பதால் அதிர்ஷ்டம் கைகொடுத்து, புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம், குடும்பத்தில் அமைதி மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் உருவாகும். மேலும் முதலீடுகள் மூலம் லாபமும், வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்களும் கிடைக்கும்.
