CRIME
“பகீர்..! மனிதாபிமானம் செத்துப்போச்சா…? நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வியாபாரி வெட்டிக்கொலை… வேடிக்கை பார்த்த மக்கள்…!!”
ஐதராபாத் சையதாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நள்ளிரவு பகலெனப் பாராமல் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகல் பொழுதில் 35 வயது மதிக்கத்தக்க துணி வியாபாரி ஒருவர் கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிங்காரெனி காலனியைச் சேர்ந்த ஃபசி அகமது (எ) அமர் என்ற அந்த நபர், மும்பை பயணத்தை முடித்துவிட்டு ஊருக்குத் திரும்பிய சிறிது நேரத்தில் மர்ம நபர்களால் இந்தத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார்.கூர்மையான ஆயுதங்களுடன் துரத்திச் செல்லப்பட்டு நடந்த இந்த வெறிச்செயல், திறந்தவெளியில் நடந்தேறியுள்ளதுடன் அங்கிருந்த பொதுமக்களின் செல்போன்களிலும் பதிவாகியுள்ளது.
படுகாயங்களுடன் உயிருக்குப் போராடியவரைப் பாதுகாக்க முன்வராமல், சுற்றியிருந்த பலரும் எந்தவிதத் தலையீடும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விதம், அவசர காலங்களில் பொதுமக்களின் மனிதாபிமானமற்ற மற்றும் அச்சமூட்டும் மௌனத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையைச் சிதைத்துள்ள இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
