CRIME
பகீர்..! நள்ளிரவு பணியில் திடீரென நிகழ்ந்த விபரீதம்.. கழிவறைக்குள் செவிலியர் உயிரிழந்தது எப்படி..? உலுக்கி எடுக்கும் பகீர் மரணம்..!!
கொல்கத்தாவின் NRS அரசு மருத்துவமனையில் இரவு நேரப் பணியில் ஈடுபட்டிருந்த 30 வயதான செவிலியர் ரூபாலி பர்மன், மகளிர் மருத்துவப் பிரிவின் கழிவறைக்குச் சென்றவர் நீண்ட நேரமாக வெளியே வராததால் சக ஊழியர்களால் கதவு உடைக்கப்பட்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார். மருத்துவமனை ஊழியர்களால் உடனடியாக மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், மருத்துவர்கள் பரிசோதனை செய்வதற்கு முன்பே உயிரிழந்துவிட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இளம் செவிலியரின் இந்த திடீர் மரணம் குறித்து கொல்கத்தா காவல்துறையின் கொலைப்பிரிவு மற்றும் தடயவியல் குழுவினர் விசாரணை நடத்தி வருவதுடன், கழிவறைக்கு வெளியே உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உடற்கூறாய்வு அறிக்கைக்காகக் காத்திருக்கும் அதேவேளையில், சுகாதாரத் துறையும் தனியாக ஒரு விசாரணைக் குழுவை அமைத்து ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
