LATEST NEWS
“ராமதாஸை விட மோடி – அமித்ஷாவை காப்பதில் தான் குறியா இருக்கீங்க” அமைச்சர் வன்னி அரசு போட்ட குண்டு… கொந்தளித்த பாமக MLA-க்கள்..!!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தின்போது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வன்னி அரசு பாமகவினரை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பாஜகவின் திட்டம் தமிழகத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேசிய அவர், தேசிய அளவில் இதற்குத் துணைபோகும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாட்டை அவையில் கடுமையாகச் சாடினார்.
அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், “எங்கள் பா.ம.க நண்பர்கள் தங்களது கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸைக் காப்பாற்றுவதை விட, டெல்லியில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரைக் காப்பாற்றுவதில்தான் அதிகக் குறியாகவும், தீவிரமாகவும் மெனக்கெடுகிறார்கள்” என்று அதிரடியாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் இத்திட்டத்திற்குப் பாமக முட்டுக் கொடுப்பதாக அவர் நையாண்டியாகப் பேசினார்.
இதைக் கேட்டு அவையில் அமர்ந்திருந்த பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவேசமடைந்து எழுந்து நின்று தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தனர். “எங்கள் தலைவரைப் பற்றிப் பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? விசிக தங்களது அரசியல் லாபத்திற்காகப் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” எனப் பாமகவினர் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த மோதலால் சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பும், காரசாரமான விவாதமும் அரங்கேறியது.
