LATEST NEWS
“அடுத்த பிறவியில இந்த குடும்பத்துக்கு வந்துடாத..!” பெற்ற மகளின் பிணத்தைப் பார்த்து தந்தை சொன்ன அந்த கொடூர வார்த்தை.. நெட்டிசன்களை அழவைத்த வீடியோ..!!
“உன்னுடைய அடுத்த பிறவியில், மீண்டும் இந்த குடும்பத்திற்குள் வந்துவிடாதே. உன்னைப் போன்ற எதையும் நான் இனி பார்க்க விரும்பவில்லை.” மர்மமான முறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, இரண்டே நாட்களில் உயிரிழந்த தனது 9 வயது மகளைப் பார்த்து, ஒரு தந்தை உதிர்த்த நெஞ்சை உலுக்கும் வார்த்தைகள் இவை. நைஜீரியாவின் பாரம்பரிய இக்போ பழங்குடியின நம்பிக்கையின்படி, பெற்றோருக்கு முன்பாக பிள்ளைகள் இறப்பது இயற்கை விதிகளுக்கு எதிரானது எனக் கருதப்படுகிறது. இத்தகைய மரணங்கள் நிகழும்போது, அக்குழந்தையை ‘ஒக்பான்ஜே’ எனப்படும் மீண்டும் மீண்டும் பிறந்து பெற்றோருக்குத் துன்பம் தரும் ஒரு மாயாவி ஆன்மாவாகவோ அல்லது மறுபிறவியின் வெளிப்பாடாகவோ அங்குள்ள மக்கள் பார்க்கிறார்கள்.
“In your next life, never come back to this family. I don’t want to see anything like you again.”
Those were the heartbreaking words of a father to his 9 year old daughter who mysteriously fell ill and died within just two days.
In traditional Igbo belief, a child is not… pic.twitter.com/xo2igVJH2r— Onwa_Nnewi (@Kene_Nnewi) August 21, 2026
ஆனால், அந்தத் தந்தையின் வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்தால், அவர் தன் மகளை மனப்பூர்வமாக வெறுத்து நிராகரிக்கவில்லை என்பது புரியும். தன் கண் முன்னே துடிதுடித்து இறந்த மகளின் இழப்பைத் தாங்க முடியாமலும், அதே கொடூரமான வலியை மீண்டும் ஒருமுறை அனுபவிக்கக் கூடாது என்ற அச்சத்தாலும் உடைந்த ஒரு தந்தையின் ஆற்றாமையே அந்த வார்த்தைகள்.
