LATEST NEWS
“யோவ் என்னய்யா நடக்குது அங்கே..?” தரையில் விழுந்து குழந்தையைப் போல் அடம் பிடித்த ரோபோ.. ஆனா இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. சமூக வலைதளங்களை அதிரவைக்கும் வீடியோ..!!
சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில், மனித உருவ ரோபோ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பத்தின் செயல்விளக்கத்தின் போது, ரிமோட் கண்ட்ரோல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அந்த ரோபோ தரையில் மல்லாக்க விழுந்தது. மனிதர்களுக்கு வலிப்பு வருவது போலவும், சிறு குழந்தை தரையில் படுத்து அடம்பிடிப்பது போலவும் அதன் கைகளும் கால்களும் மூர்க்கமாக அசைந்ததைக் கண்டு அங்கிருந்த பார்வையாளர்கள் திகைத்துப் போயினர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரோபோவின் இயக்குநர்களும் பொறியாளர்களும் உடனடியாக விரைந்து வந்து அதனைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இருப்பினும், அதன் பவரை உடனடியாக ஆஃப் செய்ய முடியாமல் அவர்கள் நீண்ட நேரம் சிரமப்பட்ட காட்சி மாநாட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த விசித்திரமான சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவசர காலங்களில் ரோபோக்களை உடனடியாக நிறுத்துவதற்கான தொழில்நுட்பப் பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கவலைகளையும் விமர்சனங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
