LATEST NEWS
“கேப்டன் பேரை சொல்லி ஆட்சிக்கு வந்தவங்க.. ஆனா எனக்கு..?” மேடையிலேயே விஜய பிரபாகரன் ஓப்பனாக போட்ட குண்டு.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் மகனும், கட்சியின் முக்கிய நிர்வாகியுமான விஜய பிரபாகரன், தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்கள் மற்றும் ஆளுங்கட்சியான தவெக-வின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், தற்போதைய சட்டப்பேரவை நிகழ்வுகள் ‘சட்டமன்றமா அல்லது பட்டிமன்றமா’ என்று சந்தேகப்படும் அளவிற்கு மாறிவிட்டதாகக் குறிப்பிட்டார். பேரவையில் மக்கள் நலன் சார்ந்த விவாதங்கள் நடைபெறுவதற்குப் பதிலாக, ஆளுங்கட்சியான தவெக-வும் பிரதான எதிர்க்கட்சியான திமுக-வும் ஒருவரையொருவர் தனிநபர் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டிக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் வீணடித்து வருவதாகத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், தனது தந்தை கேப்டன் விஜயகாந்தின் அரசியல் தியாகங்கள் மற்றும் அவரது பெயரைப் பயன்படுத்திப் பலர் இன்று அரசியல் லாபம் அடைந்து ஆட்சி அதிகாரத்திற்கு வந்துவிட்டதாக அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார். ஆனால், கேப்டனின் சொந்த மகனான தனக்கு அரசியல் களத்தில் யாரும் உரிய வாய்ப்புகளை வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் ‘மாற்றம் வேண்டும்’ என்ற முழக்கத்தோடு ஆட்சியைப் பிடித்த தவெக, தற்போது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை மட்டுமே மிச்சப்படுத்தியுள்ளது என்றும், தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அரசு நிர்வாகத்தில் பெரும் தொய்வை ஏற்படுத்தியிருப்பதாகவும் விஜய பிரபாகரன் ஆக்ரோஷமாக விமர்சித்துள்ளார்.
