LATEST NEWS
தற்கொலையா இல்ல கொலையா..? நள்ளிரவில் 8 ஆம் வகுப்பு மாணவனுக்கு என்ன நடந்தது..? வாளியோடு போன பார்வை மாற்றுத்திறனாளி பையன் பிணமாக மீட்பு… கோரக்பூர் பள்ளி விடுதியில நடந்த அந்த பயங்கரம்… பின்னணி என்ன..?!
உத்திர பிரதேச மாநிலம் கோரக்பூர் லால்டிகியில் அமைந்துள்ள ‘ஸ்பர்ஷ் அரசு பார்வைத் மாற்றுத்திறனாளிகள் சிறுவர் மேல்நிலைப் பள்ளி’ விடுதியின் கழிவறையில், 8-ஆம் வகுப்பு படித்து வந்த 18 வயதான அனூப் குமார் என்ற பார்வைத் மாற்றுத்திறனாளி மாணவர் உடலொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேவரியா மாவட்டத்தைச் சேர்ந்த அனூப், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இந்த விடுதியில் தங்கிப் படித்து வந்துள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு கழிவறைக்குச் சென்ற மாணவர் திரும்பாத நிலையில், புதன்கிழமை காலை துப்புரவுப் பணியாளர் கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்றபோது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
தகவலறிந்ததும் காவல் கண்காணிப்பாளர், கூடுதல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, செவ்வாய் இரவு அனூப் கையில் ஒரு வாளி மற்றும் கழுத்தில் துண்டுடன் தனியாகக் கழிவறையை நோக்கிச் செல்வது பதிவாகியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
காவல்துறையினர் மாணவனின் கைபேசியைக் கைப்பற்றி, அழைப்பு விவரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இச்சம்பவம் குறித்து சக மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவரின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். மருத்துவர்கள் குழு மற்றும் வீடியோ பதிவோடு பிரேதப் பரிசோதனை நடைபெற உள்ளதாகவும், அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
