LATEST NEWS
“டாஸ்மாக் வரலாற்றிலேயே முதல்முறை..” ஒரே நாளில் 67 ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம்.. அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை..!!
தமிழ்நாடு டாஸ்மாக்வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே நாளில் 67 டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடியாகப் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளது தமிழகம் முழுவதும் மாபெரும் அதிர்வலைகளையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை மற்றும் சேலம் ஆகிய முக்கிய மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில், மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்ததாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த அசுரத்தனமான அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது. சட்டமன்றப் பேரவையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும், அதற்கு அடுத்த நாளே பொதுமக்களிடம் தொடர்ந்து கூடுதல் பணம் வசூலித்ததால் இந்த அதிரடி ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்த இமாலயக் கூட்டு சஸ்பெண்ட் நடவடிக்கை குறித்துத் தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் அவர்கள் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். மதுபானக் கடைகளில் பாட்டிலுக்குக் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் அராஜகப் போக்கு தங்குதடையின்றித் தொடர்ந்தால், எவ்வித பாரபட்சமும் இன்றித் தொடர்ந்து மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் பாயும் என்று அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
