TRENDING
ஓரினை சேர்க்கையால் நிகழும் கொடுமை.. “பெண்களே வேண்டாம்”..? எல்லாம் என்னிடம் உள்ளது… ‘திருமணத்தால் ஏற்படும் விபரீதம்’…!
தற்போதைய உலகில் இயற்கையாவே எண்ணற்ற புது புது அற்புதங்களும் வியக்கவைக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகிறது .இது ஒரு புறம் இருக்கும் வேலையில் இனசேர்க்கை என்றால் மனிதராகட்டும் பிற உயிரினங்களாகட்டும் ஆண்பால் பெண்பாலுடன் சேர்வது தான் இயற்கையான விஷயம் . அந்த காலத்தில் திருமணத்திற்கு துணை அமையவில்லை என்றால் பிரம்மச்சாரியாக இருப்பார்கள் ஆனால் இந்த காலத்தில் தனக்கு துணை வேண்டும் என்பதற்காக ஓரின சேர்க்கை நடக்கிறது .
ஆண் ஆணையும், பெண் பெண்ணையும் திருமணம் செய்து கொள்கிறார்கள் அதுவும் காதலித்து. இதுஒருபுறம் இருக்க ஆண்பால் திருநங்கையுடன் திருமணமும் , திருநம்பி திருநங்கையுடனும் திருமணம் செய்து கொள்கிறார்கள் . அதுவும் இந்த 2019 தில் ஓரின சேர்க்கை திருமணமும், திருநம்பிகள் திருமணமும் அதிக அளவில் நடைபெற்று கொண்டது . அதுபோல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த ஆண்டின் இறுதி நாட்கள் நடக்கும் வேலையில் ஓரினபால் திருமணம் நடந்தது .அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது கேரளாவில் .
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐடி துறையில் பணிபுரிந்த நிகிலேஷ் மற்றும் சோனு ஆகிய 2 ஆண் தம்பதியருக்கு அதிகாரப்பூர்வ தன்பாலினத் திருமணம் நிகழ்ந்தது. அதே போல் தற்பொழுதும் இவர்கள் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது .கேரளாவைச் சேர்ந்த நிவேத் மற்றும் அப்துல் ரஹீம் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தன்பாலின திருமணம் பெங்களூரு சின்னப்பநெல்லி குளக்கரையில் திருமணம் செய்துகொண்டனர். தம்பதியருக்கு அதிகாரப்பூர்வ தன்பாலினத் திருமணம் நிகழ்ந்தது.
இவர்கள் இருஆண்டிற்கு மும்பு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு சென்று வாழலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் அரசு போட்ட 377 தீர்ப்பு வெளியானதால் நாங்கள் எதற்காக திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் வாழவேண்டும். நாங்கள் எங்கள் நாட்டிலேயே வாழலாம் என்று முடிவு செய்து அதற்காகத்தான் இப்பொழுது திருமணம் புரிந்து கொண்டோம் என்று தெரிவித்தனர்.