TRENDING
கணவனும், மாமியாரும் செய்த அசிங்கத்தால் கல்யாணம் ஆன புதுபெண் எடுத்த விபரீத முடிவு ?….

பெண் எவ்வளவு அழகா இருந்தாலும் கூட அவள் எவ்வளவு படித்து இருந்தாலும் கூட எவ்வளவு சீர் வரிசை கொண்டு வந்து இருந்தாலும் கூட அந்த காலம் முதல் இந்த காலம் வரை வரதக்ஷனை கொடுமை என்பது தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது.ஐதராபாத்தை சேர்ந்த சுஷ்மிதா என அடையாளம் காணப்பட்ட 19 வயது பெண் ஐந்து மாதங்களுக்கு முன்புதான் விஜயேந்தர் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
சுஷ்மிதா நல்ல தோற்றத்துடன் இருந்ததால், திருமணத்திற்கு முன் அவருக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்திருக்கலாம் என விஜயேந்தர் சந்தேகித்துள்ளார். மேலும், அந்த நபரின் செல்போன் எண்ணை கொடுக்குமாறு சுஷ்மிதாவை வற்புறுத்தியுள்ளார்.கணவரின் சந்தேகத்திற்கிடமான தன்மையும், மாமியார் வரதட்சணை கோரிக்கைகளும் தாங்க முடியாத நிலையில், அந்த இளம் பெண் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் அறிக்கையின்படி, இறந்த மணமகளின் பெற்றோர் தங்கம், ரூ .3 லட்சம் ரொக்கம், 150 சதுர கெஜம் மற்றும் பிற வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை திருமணத்தின் போதே வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.அப்படி இருந்தும் விஜயேந்தரின் குடும்பம் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கு குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.