LATEST NEWS
பகீர்…! சொந்தக் குட்டிகளின் கண்ணெதிரே… அடுத்த குட்டியைக் கொடூரமாகக் கொன்று தின்ற தாய் கரடி…! லைவ் கேமராவில் சிக்கிய பதறவைக்கும் காட்சி..!!
அலாஸ்காவில் உள்ள கட்மாய் தேசியப் பூங்காவில் நேர்ந்த அதிர்ச்சியளிக்கும் வனவிலங்கு சம்பவம் ஒன்று லைவ் கேமராவில் பதிவாகியுள்ளது. அங்குள்ள புரூக்ஸ் நதி அருகே அமைத்திருந்த கேமராவில், 806 எண் கொண்ட பெண் கரடி ஒன்று, 909 எண் கொண்ட பெண் கரடியின் சிறிய குட்டியைத் தாக்கி ஆக்கிரமிப்புடன் கொன்று தின்றக் காட்சி பதிவாகியுள்ளது. வனவிலங்கு நிபுணர்கள் இந்த விசித்திரமான நடத்தையைக் கண்டு வியப்படைந்துள்ளதுடன், இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர்.
இச்சம்பவம் நடந்தபோது 806 எண் கரடியுடன் அதன் சொந்த இரண்டு குட்டிகளும் அங்கு இருந்தன. தாக்குதலுக்குச் சற்று முன்பு வரை, அந்த இரண்டு குட்டிகளும் இறந்துபோன சிறிய குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தன. ஆனால் திடீரெனச் சூழல் மாறவே, 806 எண் கரடி அந்தச் சிறிய குட்டியைத் துரத்திப் பிடித்து சுமார் 20 நிமிடங்கள் அதைத் தின்றது. அதன்பின் மீதமிருந்த உடற்பகுதிகளை நிலத்தில் புதைத்து மறைத்தது. இந்த முழு நிகழ்வையும் அதன் சொந்தக் குட்டிகளும் பார்த்துக்கொண்டிருந்தன.
பொதுவாக ஆண் கரடிகளே இனப்பெருக்க நோக்கத்திற்காகப் பிற கரடிகளின் குட்டிகளைக் கொல்லும் பழக்கம் கொண்டவை. ஆனால் இச்சம்பவத்தில் ஆண் கரடி எதுவும் ஈடுபடவில்லை என்பதும், அப்பகுதியில் மீன்கள் ஏராளமாக இருந்ததால் இது பசியால் நடந்த தாக்குதல் அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அச்சத்தால் அந்தச் சிறிய குட்டி ஓடத் தொடங்கியபோது, பெண் கரடியின் இயல்பான வேட்டைக்கார குணம் விழித்துக் கொண்டதால் இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என இயற்கை ஆர்வலர் மைக் ஃபிட்ஸ் தெரிவித்துள்ளார்.
