CINEMA
நான் மேடையில் அழுவதற்கு இதுதான் காரணம்… உண்மையை உடைத்த நடிகை சமந்தா..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா முன்னணி நடிகர்களோடு நடித்து குறுகிய காலத்தில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார். தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ரீமேக்கில் நடித்த போது நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு இவர்கள் இருவரும் திடீரென்று கடந்த 2021 ஆம் வருடம் பிரிந்து விட்டார்கள் .அதன் பிறகு சமந்தா மையோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
அதனால் சினிமாவிலிருந்து சில காலம் விலகி இருந்தார். அதன் பிறகு ஓய்வெடுத்துவிட்டு திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். தற்போது தயாரிப்பாளராக களமிறங்கி விட்டார். சுபம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமந்தா அடிக்கடி நிகழ்ச்சிகளில் மேடை ஏறினாள் அழுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதனால் ரசிகர்களோ நாக சைதன்யாவை பிரிந்ததால் தான் இப்படி எமோஷனல் ஆகிறார் என்றும் பேசி வந்த நிலையில் சமந்தா இதுகுறித்து வீடியோ ஒன்று வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது “நான் மேடையில் அடிக்கடி கண்கள் கலங்குகிறேன். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் எமோஷனலால் நான் கலங்குவதில்லை. அதிகமான வெளிச்சத்தை பார்த்தால் எனது கண்கள் சென்சிட்டிவ் ஆகிவிடும். அதன் காரணமாகத்தான் கண்ணீர் வரும். இந்தக் காரணத்தில்தான் நான் மேடைகளில் இருக்கும்போது என்னுடைய கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது. மற்றபடி நான் நன்றாகவும், மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.