LATEST NEWS
திருமணம் செய்யாமலேயே குழந்தையை தத்தெடுத்த நடிகை ஷோபனா…. பலரும் பார்க்காத மகளின் க்யூட் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தவர் தான் நடிகை ஷோபனா. இவரின் பெயரை சொன்னவுடன் முதலில் ஞாபகம் வருவது அவரின் பரதநாட்டியம் மற்றும் கண்களால் பேசும் கலை தான். முறைப்படி பரதநாட்டிய தலையை கற்றுக்கொண்ட இவர் சென்னையில் நடனப்பள்ளி வைத்து அதனை நடத்தி வருகின்றார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதேசமயம் பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளையும் வாங்கியுள்ளார். இவ்வாறு நடனத்தில் ஆர்வம் கொண்ட இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்தில் ஆர்வம் இல்லாத இவர் 52 வயதாகியும் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து அந்த குழந்தைக்கு ஆனந்த நாராயணி சந்திரகுமார் என்று பெயர் சூட்டியுள்ளார். அந்த குழந்தையின் அவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.