CINEMA
வசூலில் ‘பாகுபலி 2’ சாதனையை தரைமட்டமாக்கிய ‘துரந்தர் 2’..! 19 நாட்களில் இத்தனை கோடி வசூலா..? ஆடிப்போன இந்திய சினிமா..!
இந்தியத் திரையுலகில் ரூ. 1000 கோடி வசூல் என்பது ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அந்த வகையில், இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான ‘துரந்தர் 2’ திரைப்படம் தற்போது இந்தப் பட்டியலில் இணைந்து சாதனை படைத்துள்ளது. ‘தங்கல்’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பல படங்கள் இந்தச் சாதனையை எட்டி வரும் நிலையில், துரந்தர் 2 திரைப்படம் வெளியான 7 நாட்களிலேயே ரூ. 1000 கோடி வசூலித்து, இந்திய சினிமாவிலிருந்து இந்தச் சாதனையைப் படைத்த 10-வது திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தற்போது 19 நாட்களைக் கடந்திருக்கும் இந்தப் படம், உலகம் முழுவதும் வசூல் வேட்டையைத் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, 19 நாட்களில் உலகளவில் ரூ. 1650 கோடிக்கும் மேல் வசூல் செய்து மலைக்க வைத்துள்ளது. இதில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ. 36 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகிற்கு ரூ. 1000 கோடி வசூல் என்பது இன்னும் எட்டாக்கனியாக இருக்கும் சூழலில், இது போன்ற பிரம்மாண்டப் படங்களின் வெற்றி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்ட மேக்கிங் மற்றும் விறுவிறுப்பான கதைக்களம் ஆகியவை மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நாட்களில் இந்த வசூல் வேட்டை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் இப்படம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி. விரைவில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவிலிருந்தும் இது போன்ற ஆயிரம் கோடி வசூல் சாதனையை முறியடிக்கக்கூடிய பிரம்மாண்டப் படங்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
