CINEMA
மெகா ஹிட் பாட்டுக்கு ரஜினி போட்ட முட்டுக்கட்டை…!! வரலாற்றை மாற்றிய இளையராஜாவின் அந்த ஒரு வார்த்தை…!!
தமிழ் சினிமாவின் மைல்கல்லாகக் கருதப்படும் “அம்மா என்றழைக்காத உயிரில்லையே” என்ற பாடல் உருவான பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 1992-ல் வெளியான ‘மன்னன்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலில் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பத்தில் தயக்கம் காட்டியுள்ளார். தான் ஒரு ஆக்ஷன் நாயகனாக இருக்கும்போது, இவ்வளவு உருக்கமான பாடலில் நடிப்பது சரியாக இருக்குமா என்று அவர் யோசித்துள்ளார். இரண்டு நாட்களாகப் படப்பிடிப்பிற்கு வராமல் தவிர்த்த ரஜினி, பின்னர் இளையராஜாவின் அறிவுரைக்குப் பின்பே இதில் நடிக்கச் சம்மதித்துள்ளார்.
ரஜினியைச் சந்தித்த இளையராஜா, “இந்தப் பாடல்தான் உங்களை ஒவ்வொரு வீட்டின் செல்லப் பிள்ளையாக மாற்றும்” என்று கூறியதைக் கேட்டு ரஜினி மனம் மாறியுள்ளார். ஜேசுதாஸின் கணீர் குரலில், வாலியின் வரிகளில் வெளியான இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் ஹிட்டானது. இளையராஜா கணித்தது போலவே, ரஜினியின் திரைப்பயணத்தில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பிற்கு இப்படம் ஒரு முக்கிய அடையாளமாக மாறியது. இன்றும் பலரின் ‘ஃபேவரிட்’ லிஸ்டில் இருக்கும் இப்பாடல், ரஜினியின் மாஸையும் தாண்டி மெலோடியால் மக்கள் மனதை வென்றதற்கு இளையராஜாவின் அந்தத் தீர்க்கமான முடிவே காரணமாகும்.
