LATEST NEWS
“காசுக்காக மட்டும் தான் நான் நடிக்கிறேன்”…. விமர்சித்தவர்களுக்கு ஒத்த வார்த்தையில் பதிலடி கொடுத்த நடிகை பிரியா பவானி சங்கர்…..!!!!
சின்ன திரையில் வளம் வந்த பிரியா பவானி சங்கர் பின்னர் வெள்ளி திரைக்கு அறிமுகமானார். தமிழில் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாபியா படத்திலும் நடித்தார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அகிலன், இந்தியன் 2, ருத்ரன் மற்றும் 10 தல ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
இவ்வாறு பிசியாக இருந்து வரும் பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் நுழைய மிகவும் கஷ்டப்பட்டதாகவும் வாய்ப்புகள் கிடைக்க கடினமாக உழைத்ததால் தான் பணம் கிடைத்ததால் அதற்காக படத்தில் நடிக்க ஒப்பு கொண்டதாகவும் கூறி இருந்தார். மேலும் பணம் சம்பாதிப்பதை விட நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதாக கூறியிருந்தார்.
இதனை பலரும் பணத்திற்காக நடிக்கிறேன் என்று பிரியா பவானி சங்கர் கூறியதாக செய்திகளை இணையத்தில் பரப்பி வந்தனர். இந்நிலையில் இதனை அறிந்த பிரியா பவானி சங்கர் பிட்டரில் பதிலடி கொடுத்து ஒரு பதிவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
https://twitter.com/priya_Bshankar/status/1615953763340288001
