LATEST NEWS
“சாதியைக் கேட்டு கக்கூஸ் அருகே படுக்க வச்சாங்க…”மதுரை சிறை கொடுமையை விவரித்த வன்னி அரசு..!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிகழ்ச்சியில் பேசிய வன்னி அரசு, தான் முதல்முறையாகக் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது தனக்கு நேர்ந்த அவலம் குறித்து மனம் திறந்துள்ளார். சிறைக்குச் சென்ற உடனேயே அங்குத் தன்னுடைய சாதியைப் பற்றிக் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சாதியைச் சொன்னதைத் தொடர்ந்து, தான் உள்பட 26 பேரை கழிப்பறை அருகே படுக்க வைத்ததாக அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, சிறையிலேயே சமத்துவம் கோரி போராட்டம் நடத்தியதாகவும், எங்கு சமூக அநீதி நடந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.
