CRIME
“ஆண்டி சமைச்சு வைங்க, 2 நிமிஷத்துல வந்திடுறேன்..” பிறந்தநாள் விருந்து என அழைத்துச் சென்று.. 14 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… கதறி துடிக்கும் தாய்…!!
நொய்டாவில் 14 வயது சிறுவன் ஆயுஷ் சுக்லா, அசாத் என்ற இளைஞரால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் நொய்டாவின் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடா கிராமத்தில் அரங்கேறியுள்ளது.
கொலை செய்யப்படுவதற்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்ட அசாத் சிறுவன் ஆயுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளான். அவனது பிறந்தநாள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆயுஷை வெளியில் கூப்பிட்டுள்ளான். ஆயுஷின் தாய் யோகமாயா சுக்லாவிடம், “ஆண்டி, சாப்பாடு சமைத்து வையுங்கள், இரண்டு நிமிடத்தில் ஆயுஷுடன் திரும்பி வந்துவிடுகிறேன்” என்று கூறிவிட்டு அழைத்துச் சென்றுள்ளான். ஆனால், வெளியில் சென்ற சிறிது நேரத்திலேயே அசாத், ஆயுஷ் மீது கத்தியால் கொடூரமான முறையில் பலமுறை குத்தியுள்ளான். இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட நபர் தலைமறைவாகிவிட்டதாகத் தெரிகிறது. கொலைக்கான துல்லியமான காரணம் மற்றும் அவர்களுக்குள் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய நொய்டா காவல்துறை பல தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
