LATEST NEWS
“நான் யாரையும் குறிப்பிடலையே..!” ராகுல் காந்தி போட்ட ஒரே வார்த்தை… அலறி துடித்த பாஜக.. நாடாளுமன்றத்தில் உச்சகட்டப் பரபரப்பு..!!
மக்களவையில் இன்று உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையோ அல்லது வெறுப்பின் வெளிப்பாடோ அல்ல; அது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலம் குறித்த கவலையையும் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்கும் ஆழமான ஜனநாயக வெளிப்பாடு” என்று குறிப்பிட்டார். மேலும், இந்தச் சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் தவறாகப் புரிந்துகொள்ளாமல் பெருமையுடன் பார்க்க வேண்டும் என்றும், “இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் மட்டுமே கேட்க மாட்டார்கள்” என்றும் அவர் காரசாரமாகப் பேசினார்.
ராகுல் காந்தியின் உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்ற அவையில் ஆளுங்கட்சியான பாஜக எம்.பி-க்கள் ஒன்றுதிரண்டு கடும் எதிர்ப்பைப் பதிவுசெய்ததால் பெரும் அமளி நிலவியது. இதைத் தொடர்ந்து, “காரசாரமான கருத்துகளைத் தவிர்த்து, விவாதத்திற்குரிய தலைப்பில் மட்டுமே பேசுங்கள்” என சபாநாயகர் ஓம் பிர்லா, ராகுல் காந்திக்கு அறிவுறுத்தினார். அதற்கு, தான் மாணவர்களின் எதிர்காலம் குறித்து மட்டுமே பேசுவதாகவும், யாரையும் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை என்றும் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார். இருப்பினும், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பியதால், அவையில் கடுமையான சலசலப்பும் பதற்றமும் நீடித்தது.
