LATEST NEWS
செய்தியாளர்கள் கேட்ட கேள்வி… கடும் ஆத்திரமடைந்த நடிகை ஓவியா..! நல்ல பதிலடி கொடுத்தார் ….ட்விட் பதிவை பாருங்க
தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமே வைத்து அதற்கு ஒரு நடிகை தன ஓவியா. கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் விமல் நடித்து வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. பின்பு, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகளவில் பிரபலமானார். நிகழ்ச்சியில் தன்னுடைய உண்மையான குணத்தை வெளிப்படுத்தியதன் மூலம், அந்த நிகழ்ச்சி முடியும் வரையிலும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருந்தார் நடிகை ஓவியா.
media asking about political questions to oviya
பின்னர், சமீபத்தில் இவர் நடித்து வெளியான 90எம்.எல் என்ற படத்தினால், சிறிது சர்ச்சையில் சிக்கினார். பெண்கள் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளில் இவர் நடித்திருந்ததால், சில இடங்களில் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர் அறிமுகமான களவாணி படத்தின் 2வது பாகத்தில் நடித்து குறித்த படமும் வெளியானது. பெரிய அளவிற்கு பேசப்படவில்லை. தற்போது, ராஜபீமா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் செய்தியாளர்கள் சமீபத்தில் ஓவியாவிடம் கமல், ரஜினி அரசியல் குறித்து சமீபத்தில் கேள்வி எழுப்பினர். இதனால் மிகுந்த கோபமடைந்த ஓவியா, பதில் எதுவும் கூறாமல் சென்றுவிட்டார். தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் சார்பற்ற நடிகர், நடிகைகளிடம் அரசியல் குறித்து கேள்வி கேட்பதை செய்தியாளர்கள் தவிர்க்க வேண்டும்.இந்த கேள்விகளை பொது மக்களிடம் கேட்டால் எதிர்பாராத பதில்கள் கிடைக்கும் என்று தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை ஓவியா.