LATEST NEWS
காதலுக்கு நோ சொன்ன நவரச நாயகன் கார்த்திக்…. தற்கொலைக்கு முயன்ற 90ஸ் நடிகை…. அது யார் தெரியுமா….????

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த முதல் படமே வெற்றி கொடுத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. சினிமாவிலிருந்து சற்று விலகி இருந்த இவருக்கு,கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத் திரைப்படத்தில் வில்லனாக மாஸ் என்ட்ரி கொடுத்தார். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர்.அதன் பிறகு நான்கு வருடங்கள் கழித்து ராகினியின் தங்கை ரதியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் கார்த்திக். இவரின் மகன் கௌதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் பத்திரிக்கையாளர் ஆன பயில்வான் ரங்கநாதன் நடிகர் கார்த்திக் பற்றி பல தகவல்களை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது பல நடிகைகள் நடிகர் கார்த்திக் காதலில் விழுந்துள்ளனர்.
ஆனால் அவர் யாரிடமும் தவறாக நடந்து கொண்டதில்லை. நடிகை ஸ்ரீபிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கார்த்திகிடம் வற்புறுத்தினார். ஆனால் கார்த்திக் திருமணம் செய்ய மறுத்து விட்டதால் நடிகை ஸ்ரீபிரியா தற்கொலை முயற்சி செய்தார். அதன் பிறகு ஸ்ரீபிரியா மனம் தேறி ராஜ்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.